Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேல் அருங்குணம் ஸ்ரீ ஒலக்கூர் மகாமாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம்

ஜுலை 13, 2019 05:22

பண்ருட்டி அருகே உள்ள மேல்அருங்குணம் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஒலக்கூர் மகாமாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதுர்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. 

இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்ததைடுத்து நேற்று முன்தினம் ஸ்ரீ விநாயகர் பூஜை நவக்கிரக பூஜை .தனபூஜை அக்னி சங்கிரஹணம் ஹோமங்கள் தீபராதனைகள் நடைப்பெற்றது. 

கும்பாபிஷேக நாளான இன்று காலை கால பூஜைகள் ,மண்டல பூஜை, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் ஸ்பர்சா ஹூத், மஹாபூர்ணாஹுத் தீப ஆராதனைகள் நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து கோவில் கோபுர கலசத்தின் மீது  புனித நீர் ஊற்றப்பட்டு 3வது முறையாக மஹி கும்பாபிஷேகம் நடந்தது பின்னர் கோவிலில் திரண்டு இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீப ராதனை காண்பிக்கப்பட்டது 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்